செவ்வாய், 7 ஏப்ரல், 2015


அஸ்ஸலாமு அலைக்கும்...

தொண்டி பேரூர் தமுமுக நடத்திய முப்பெரும் நான்கு நிகழ்வுகள்.............. 



தொண்டி பேரூர் தமுமுக சார்பில் இன்று 7/4/2015 முப்பெரும் நான்கு நிகழ்வுகள் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தொண்டியில் மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுகள் 1), காலை 10 மணியளவில் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் நீர் மோர் தர்பூசணி ஜூஸ் பந்தல் திறந்து பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்வுகள் 2), மதியம் 2 மணியளவில் தொண்டி அன்பாலயாவின் உண்டு உறைவிட பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு மாவட்ட தொண்டரனி துனை செயலாளர் ஆனந்தூர் சகோ,பட்டாணி மீரா ஏற்பாட்டில் மதிய உணவுகள் ஏற்பாடு செய்து இலவசமாக கொடுக்கப்பட்டது நிகழ்வுகள், 3) மாலை 4 மணியளவில் தொண்டி மரைக்காயர் தெரு பகுதியில் சென்னை வாழ் தமுமுக நிர்வாகி தொண்டி சகோ,ஜப்ரான் அவர்களின் ஏற்பாட்டில் பெண்களுக்கு மார்க்க விழிப்புணர்வு உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்வுகள், 4)தொண்டி பாவோடி மைதானத்தில் மாலை 6 மணியளவில் தமுமுக வடக்கு தெரு கிளை சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மார்க்க பிரச்சாரகர்கள் மௌலவி, ஹாஜி அலி பிர்தவ்ஷி அவர்களும் மௌலவி பைசுல் ரஹ்மான் பைஜி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள் இந்த நான்கு நிக்ழ்விலும் தமுமுக மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா தலைமை தாங்கினார்கள் ஒன்றிய செயலாளர் நம்புதாளை சாகுல் ஹமீது முன்னிலை வகிக்க மமக தொண்டி நகர செயலாளர் ஆயிஷா பரக்கத் அலி, மாவட்ட தொண்டரனி துனை செயலாளர் ஆனந்தூர் பட்டாணி மீரா,தொண்டி பேரூர் செயலாளர் கலந்தர் ஆசிக், பொருளாளர் அப்துல் ரஹீம், துனை செயலாளர்கள் இபுராகிம்,நெய்னார் ஹாஜா,ஜலால் தொண்டரனி செயலாளர் மீரான் தெற்குப்பகுதி செயலாளர் இஞ்சினியர் ஹபீப் ரஹ்மான்,வடக்கு பகுதி செயலாளர் ராஜ் முகம்மது பொருளாளர் செய்யது மலுங்கு துணை செயலாளர்கள் பௌசுல் ரஹ்மான் அப்துல் ரவூப் கிழக்கு பகுதி செயலாளர் அப்துல் ரஜாக் துனை செயலாளர் முகைதீன் பிச்சை சென்னை மண்ணடி 106 வது வட்ட செயலாளர் தொண்டி ஜப்ரான் மற்றும் ஏராளமானோர் இம்மூன்று நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் (அல்ஹம்து லில்லாஹ் ) எல்லா புகழும் இறைவனுக்கே! 

சளைக்காமல் சமுதாய பணி!
அதுவே தமுமுக வின் தலையாய பணி! 
இவன்; தமுமுக தொண்டி பேரூர்.................................

செவ்வாய், 30 டிசம்பர், 2014

காஞ்சிரங்குடி ஊராட்சியில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் ரூபாய் 10.00 பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு !



ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிரங்குடி ஊராட்சியில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் கட்டுதல் பணிகளுக்காக ரூபாய் 10.00 பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், காஞ்சிரங்குடி ஊராட்சி, காஞ்சிரங்குடி கிராமத்தில் முஸ்லிம் மயானம் சுற்றுச்சுவர் கட்டுதல் பணிகளுக்காக

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2014 - 2015 ம் ஆண்டின் கீழ்

மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 10.00 ( பத்து லட்சம் ) நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.

திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) கடித எண் : ந.க.தி4 /4146 /2014

அரசாணை எண் : ந.க.ஆர்.4/6311/2014.

இணைப்பு : -

அரசாணை நகல்.

வெள்ளி, 28 நவம்பர், 2014

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நகராட்சி கான்சாஹிப் தெரு பகுதிகளில் கள ஆய்வு !






ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ராமநாதபுரம் நகராட்சி கான்சாஹிப் தெரு பகுதிகளுக்கு நகராட்சி ஆணையாளர் மற்றும் முனிசிபல் பொறியாளருடன் நேரடியாக சென்று கள ஆய்வு !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வெளிப்பட்டிணம் கான்சாஹிப் தெரு, மற்றும் நாகநாதபுரம் புதுத்தெரு பகுதிகளுக்கு தொடர் மழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை காண்பதற்காக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் சென்றபொழுது முறையான வடிகால் அமைக்கப்படாததால் மழைநீர் குளம்போல் தேங்கியிருந்தது, அதை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. இப்பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இதில் குறைந்த மின் விநியோகம் காரணமாக மின்விளக்குகள் குறைந்த வெளிச்சத்தில் எரிவதாகவும், மின்மோட்டார் இயக்க முடியவில்லை அதனால் அன்றாட தேவைகளை சரியாக நிறைவேற்ற முடியவில்லை எனவும், கூடுதல் குறைவாக மின்சாரம் வந்து வந்து செல்வதால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும்,
அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மாணவர்கள் முதியோர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் இந்த நிலையை போக்க கூடுதல் மின்மாற்றி அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக மின்சார வாரிய முதுநிலை அதிகாரியை உடன் தொடர்புகொண்டு குறைகளை சரிசெய்ய ஆவண செய்யப்பட்டது.

மேலும் இப்பகுதியில் சில இடங்களில் தெரு விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை எனவும், கொழும்பு ஆலிம் உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் பகுதியில் நாய், பன்றிகளால் மிகுந்த சுகாதாரக்கேடு இருப்பதாகவும், குப்பைகளை அவ்வப்பொழுது அகற்றாததால் நோய் பரவும் அபாயமும் உள்ளதாக தெரிவித்தனர். நகராட்சி ஆணையாளர் உடன் இருந்து பொதுமக்களின் அனைத்து குறைகளையும் நேரடியாக பார்த்ததால் அவ்வப்பொழுது அந்தந்த துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் குறை சம்பந்தமான நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.
வார்டு கவுன்சிலர் திருமதி.ஐனுல் சரிபா அவர்கள் கூறும்பொழுது மழைகாலத்தில் குப்பை மற்றும் வாறுகால் பிரச்சினை காரணமாக பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் தெருக்களில் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றார்.
நகராட்சி கமிஷனர் திரு.சிராஜ் மற்றும் முனிசிபல் இஞ்சினியர் திரு.சேர்மக்கனி அவர்கள் கூறும்பொழுது சாலையில்லாத தெருக்களுக்கு சாலை அமைக்க அரசுக்கு Proposal அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனுமதிபெற்று சாலைகள் அமைக்கப்படும் எனவும், நகராட்சி சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் படிப்படியாக தீர்வு காணப்படும் எனவும் கூறினார்கள்.
இந்த ஆய்வின் பொழுது சட்டமன்ற உறுப்பினருடன் மாவட்ட நிர்வாகிகள் அன்வர் அலி, முஹம்மது சித்திக், ஒன்றிய நிர்வாகிகள் பாக்கர் அலி, அகமது இப்ராஹீம், சுல்தான், நகர் நிர்வாகிகள் பஷீர்அகமது, பரக்கத்துல்லா, மன்சூர் ஆகியோர் உடனிருந்தனர்.
இணைப்பு படங்கள் விபரம் : -
1 . அரசு அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியப்பட்டது.
2 . பொதுமக்கள் நடமாட முடியாத வண்ணம் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் மழைநீர் வெளியேற வாறுகால் இல்லாததால் குப்பைகள் கலந்து குளம்போல் தேங்கிநிற்கும் மழைநீர்.
3 . குறைவான மின்சாரம், நாய் மற்றும் பன்றி தொல்லைகள், குப்பைகளை அகற்ற கால தாமதம் பற்றி முறையிடும் பொதுமக்கள்.
4 . தேங்கிநிற்கும் மழைநீரை அகற்ற உத்தரவிடும் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர்.

2004 தஞ்சைப் பேரணி -- தமுமுக


புதன், 19 நவம்பர், 2014

அரசு முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்ததா?


நாடாளுமன்றத் தேர்தலும் நமது எழுச்சியும் -- தமீமுன் அன்சாரி


அரசியல் விழிப்புணர்வு -- கோவை செய்யது


இஸ்லாத்தின் பார்வையில் ஸதக்காவும் ஜக்காத்தும் --- மௌலவி அலிஅக்பர் உமரி


முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டில் தமுமுகவின் பங்கு


இலங்கை சிறையில் வாடிய தமிழக சிறைவாசிகள் மமகவின் தொடர் முயற்சியால் விடுதலை!!!


இலங்கை வெலிக்கடை சிறையில் வாடிய தமிழகத்தை சேர்ந்த அனைத்து சமுதாய சிறைவாசிகள் எட்டுபேர் மனிதநேய மக்கள்கட்சியின் தொடர் முயற்சியால் விடுதலையடைந்தனர் !




இலங்கை சிறையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த நபர்கள் தண்டனை அனுபவித்து வந்தனர். கடந்த 2010 ல் நடந்த இலங்கை மற்றும் இந்தியாவின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வெலிக்கடை சிறையில் இருந்து 16 கைதிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தமிழக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் தண்டனை பெற்று தன் குடும்பத்தாருடன் திருந்திவாழ விருப்பப்படும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த நபர்களின் நிலை அறிந்து சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றகுழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹி
ருல்லா MLA அவர்கள் தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இப்பிரச்சினையில் கூடுதல் கவனமெடுத்து பேசி வந்தார்கள்.

அதனடிப்படையில் கடந்தமாதம் திருச்சி சிறையில் இருந்த மஞ்சத்திடல் திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிங்கராயர் 50/M, கண்ணன் 45/M, ராமநாதன் 48/M, ராஜகோபால் 49/M, முனியசாமி 50/M, காசீம் 50/M, இபுராஹீம் மகன் மீரா முஹைதீன் 50/M, மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த முஹைதீன் மகன் முஹைதீன் அபூபக்கர் 40/M ஆகிய எட்டு நபர்களும் தன் வாழ்நாளில் அதிகமான நாட்களை தன்னுடைய மனைவி மக்களை விட்டு பிரிந்து சுமார் 11 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி தற்போது விடுதலையடந்துள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள மீதமுள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் உட்பட எட்டு நபர்களும் வரும் மாதங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.


சிறையிலிருந்து விடுதலையான அனைவரும் தொலைபேசியிலும், நேரிலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முஹைதீன் அபூபக்கர் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரை ஏற்றார்.